ஜீமெயில், கூகுள் ட்ரைவ் உள்ளிட்ட கூகுளின் சேவைகள் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இலங்கையிலும் இந்த பாதிப்பு உணரப்பட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை காலை, ஜீமெயில் உள்ளிட்ட கூகுளின் சேவைகள் சரியாக வேலை செய்யவில்லை எனப் பலர் சமூக ஊடகங்களில் பதிவிட ஆரம்பித்தனர்.
இப்படியான சேவைகள் பாதிக்கப்படுவதைக் கண்காணிக்கும் தி டவுன் டிடெக்டர் போர்டல் என்கிற தளம், 62 சதவீத பயனர்களுக்கு இணைப்போடு வரும் மின்னஞ்சலிலும் தடங்கல் இருப்பதும், 25 சதவீதம் பயனர்களுக்கு லொக் இன்னிலும் பிரச்சினை இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. அதேநேரம் எல்லா பயனர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படவில்லை.
ஜீமெயில் சேர்வர் வேலை செய்யவில்லை, கோப்புகளை இணைக்க முடியவில்லை, வெறுமையான மின்னஞ்சல்களை மட்டுமே அனுப்ப முடிகிறது, பல்வேறு கணக்குகளிலிருந்து முயற்சித்தாலும் இந்தப் பிரச்சினை தொடர்கிறது எனப் பல்வேறு வகையான புகார்களை சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது.
இந்தப் பிரச்சினைகள் பற்றி கூகுள் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ பதில் எதுவும் வரவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM