கொரோனா உலகையே ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் நிலையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைபிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலையில், நல்ல முன்னேற்றம் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், 75, கொரோனா தொற்றுக்குள்ளாகி, சென்னை, எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் வைத்தியசாலையில் சிகிச்சையில் உள்ளார். உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்குகின்றன. நுரையீரல் செயல்பாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வர, உயிர்காக்கும் உபகரணங்கள் வழியாக, ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வைத்தியசாலை வட்டாரத்தில் கூறுகையில், சிகிச்சைக்கு, அவரது உடல் நிலை நன்கு ஒத்துழைப்பதாகவும், என்டிபயாடிக் வழங்கப்பட்டு வருவதாகவும், இதனால் அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் தெரியவருகிறது.
எனினும், அவர் உயிர்காக்கும் உபகரணங்கள் உதவியுடன் சுவாசிப்பதால், ஆபத்தான நிலை என்றே, வைத்திய ரீதியில் குறிப்பிட வேண்டியுள்ளது. தற்போதுள்ள நிலையில், தொடர் சிகிச்சை அளிக்கப்படும்போது, குணமடைவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM