(செ.தேன்மொழி)
ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற ஒரு தேசியப்பட்டியலுக்கும் அவர்களால் ஒருவரைக்கூட நியமிக்க முடியாமல் போயுள்ளது. அந்த கட்சிக்குள் தொடரும் முரண்பாடுகளே இதற்கு பிரதான காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல தெரிவித்தார்.
எவ்வாறாயினும் தேசியப்பட்டியல் ஆசனத்தில் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றம் வருவதே சிறந்த விடயமாகும். மேலும் ஐ.தே.க எம்முடன் இணைந்து செயற்பட விரும்பினால் அதற்கும் தயாராகவே உள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
வரலாற்றில் முதல் தடவையாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கூட இல்லாமல் இம்முறை பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் ஐ.தே.க.வின் முன்னாள் உறுப்பினர் என்ற வகையில் கவலைக் கொள்கின்றேன். ஆனால், தேசியப்பட்டியலில் ஒரு ஆசனம் ஐ.தே.க.வுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கும் ஒருவரைக்கூட நியமிக்க முடியாமல் உள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாடளாவிய ரீதியில் கிடைக்கப் பெற்ற வாக்குகளுக்கமையவே தேசியப்பட்டியலில் ஒருவர் செல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் அந்த பட்டியலில் கட்சித் தலைவர் ரணில் விக்கரமசிங்கவின் பெயரே உள்ளடக்கப்பட வேண்டும் . அந்த கட்சியில் தற்போது இருப்பவர்களில் அவரே பாராளுமன்றத்தில் இருக்க வேண்டியவர்.
ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை பெற்றுக் கொள்ளவோ , சிறிகொதாவை கைப்பற்றவோ தேர்தலில் போட்டியிடவில்லை.
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கிலேயே தேர்தலில் போட்டியிட்டது. இந்நிலையில் சிறிகொத்தாவை கைப்பற்றுவது எமது எண்ணம் கிடையாது. ஐ.தே.க.வினர் எமது கட்சியுடன் இணைந்து செயற்ட விரும்பினால் அவர்களை இணைத்துக் கொண்டு எமது எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM