மத்திய பிலிப்பைன்ஸில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நிலநடுத்தால் பலர் காயமடைந்துள்ளதோடு வீடுகள் சேதமாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கட்டிடங்கள், பாலங்கள் மற்றும் ஒரு துறைமுகம் சேதமடைந்துள்ளது.
கடலோர நகரமான கேடிங்கனில் மூன்று மாடி வீடு இடிந்து விழுந்துள்ளது.
ஒரு ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி உயிரிழந்துள்ளார்.
நிலநடுக்கத்தால் மஸ்பேட் மாகாணத்தில் 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அனர்த்த நிலையம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேடிங்கனில் சேதமடைந்த இரண்டு அரசாங்க கட்டிடங்களில் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்ட 100 க்கும் மேற்பட்டோர் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக சிவில் பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸின் கேடிங்கன் நகரத்தில் இருந்து சுமார் 21 கிலோமீற்றர் தொலைவில் 6.6 ரிச்டர் அளவுகோலில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில நடுக்க மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மத்திய விசயாஸ் பகுதி முழுவதும் உள்ள பல மாகாணங்களில் இது உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கங்கள் அதிகம் ஏற்படும் பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் பிலிப்பைன்ஸ் உள்ளதோடு, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 சூறாவளி மற்றும் வெப்பமண்டல புயல்களால் தாக்கப்படுகிறது. இது உலகின் மிக பேரழிவுக்குள்ளான நாடுகளில் ஒன்றாகும்.
1990 இல் வடக்கு பிலிப்பைன்ஸில் 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தால் கிட்டத்தட்ட 2,000 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM