கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்து வரும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க இராணுவத்தின் உதவியை நாடவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று (18) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றமை ஊடகங்கள் உட்பட பலரும் தங்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
குறிப்பாக இரணைமடுக் குளத்தின் கீழான சட்டவிரோத மணல் அகழ்வால் குளத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் எனவே இதனைக் கட்டுப்படுத்த இராணுவத்தின் உதவியை பெறவுள்ளதாகவும். இது தொடர்பில் நாளை புதன்(19) கிழமை கிளிநொச்சி படைகளின் கட்டளைத்தளபதியை சந்தித்துகலந்துரையாடவுள்ளதாகவும் அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு, பன்னங்கண்டி, கண்டாவளை, பெரியகுளம், கல்லாறு, தட்டுவன்கொட்டி, ஊற்றுப்புலம், அக்கராயன், கிளாலி, முகமாலை, சோரன்பற்று, புளோப்பளை, மற்றும் பளையின் மேலும் பல பிரதேசங்கள் உட்பட பல இடங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறன்றமை குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM