( எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவித்தல் இன்றையதினம் ஆணைக்குழு ஊடாக விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன உள்ளிடோருக்கும் ஆணைக் குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பின்னணியிலேயே தற்போது முன்னாள் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவும் அழைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன இன்றைய தினம் ஆணைக் குழுவில் பொலிஸ் பிரிவுக்கு வாக்குமூலம் பெற அழைக்கப்பட்டிருந்தார்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மற்றும் முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோர் எதிர்வரும் 21 ஆம் திகதியும் ஆணைக் குழுவின் பொலிஸ் பிரிவுக்கு அழைக்கப்ப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM