( எம்.எப்.எம்.பஸீர்)
அத்துருகிரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்று தொடர்பிலான தகவலை மையப்படுத்தி இடம்பெற்ற விசாரணைகளில், இரு வேறு சந்தர்ப்பங்களில் அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில், ஆய்வுகூட சேவையில் ஈடுபடும் இருவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று இரவு 7.30 மணியுடன் நிறைவுக்கு வந்த 36 மணி நேரத்தில் இரு வேறு சந்தர்ப்பங்களில் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் கூறினார்.
நேற்று கிடைக்கப் பெற்ற முதல் தகவலுக்கு அமைய நேற்று மாலை 5.30 மணயளவில் அத்துருகிரிய பொலிஸார் மொரட்டுவஹேன பகுதியில் வைத்து 18 கிராம் 730 மில்லிகிராம் ஹெரோயினுடன் 28 வயதான ஒருவரைக் கைது செய்தனர்.
அவர் அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் ஆய்வுகூட ஊழியர் என்பதுடன் மாத்தறை பகுதியைச் சேர்ந்தவராவார்.
அவரிடமிருந்து மோட்டார் சைக்கிளொன்றும் மீட்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை சந்தேக நபரைத் தடுத்து வைத்து அத்துருகிரிய பொலிசார் முன்னெடுத்தனர்.
இதன்போது வெளிபப்டுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய மற்றொரு சந்தேக நபரை இன்று மாலை அத்துருகிரிய பொலிஸார் கைது செய்தனர்.
22 வயதான பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த குறித்த நபரிடம் இருந்து 25 கிராம் ஐஸ், 15 கிராம் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள் ஒன்றும், போதைப்பொருட்களை நிறுக்க பயன்படுத்தபப்டும் கருவி ஒன்றும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள் அத்துருகிரிய பொலிஸ் பொறுப்பதிகாரியின் கீழ் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM