வெலிமடைப் பகுதியின் வோர்விக் பெருந்தோட்ட மார்ட்டின் பிரிவு இலக்கம் 7 குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீயினால் 14 குடியிருப்புக்கள் சேதமாகியுள்ளன.
இன்று 17.08.2020 முற்பகல் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ வரிசைக் குடியிருப்புக்கள் 14க்கும் பரவியதில் தொழிலாளர்களின் உடமைகள் அனைத்தும் சேதத்துக்குள்ளாகியுள்ளன.உயிராபத்துக்கள் எதுவும் இடம்பெறாத போதிலும்,பெரும் பொருட்சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
இதனையடுத்து பதுளை மாவட்ட இடர் முகாமைத்துவத்தினர் விரைந்து சேதங்களுக்குள்ளான 14 குடும்பங்களின் 64 பேர் வோர்விக் பெருந்தோட்ட தோட்ட சிறுவர் சமூக பராமரிப்பு நிலையத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உலர் உணவுகள் மற்றும் சமைத்த உணவு வகைகள் இடர் முகாமைத்துவ பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களில் 20 ஆண்களும் 29 பெண்கள் மற்றும் சிறுமிகள் 15 சிறுவர்களும் குழந்தைகளும் அடங்ககியுள்ளனர்.
இத் தீ மின்சாரக் கசிவினால் ஏற்பட்டதென்று மின்சார சபையினர் மற்றும் பொலிஸாரின் விசாரனைகளிலிருந்து தெரியவருகின்றது.
வெலிமடை மற்றும் அம்பகஸ்தோவை ஆகிய இடங்களில் பொலிசார்,மேற்படி தீச் சம்பவம் குறித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
இச் சம்பவம் குறித்து பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளரான செந்தில் தொண்டமான் உடனடியாக விரைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான அனைத்துஉட்கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுக் கொடுக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
அத்துடன் அவர் பகுதி பிரதேச செயலாளர்,இடர் முகாமைத்துவ பணிப்பாளர்,தோட்ட முகாமையாளர்,ஆகியோருடனான சந்திப்பினை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு திட்டங்கள் குறித்து,கலந்துரையாடி ஆக்கப்பூர்வ வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார்.
இச் சம்பவம் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பெருந்தோட்ட வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோரின் கவனத்திற்கும்,பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் கொண்டு சென்றுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM