நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடைக்கான காரணம் இது தான் !

Published By: J.G.Stephan

17 Aug, 2020 | 02:33 PM
image

நாடளாவிய ரீதியில் மின் வழங்கலில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

வத்தளை-கெரவலப்பிட்டி பகுதியில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாகவே குறித்த மின் துண்டிப்பு இடம்பெற்றுள்ளதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

தற்போது குறித்த மின் வழங்கலில் ஏற்பட்டுள்ள கோளாறை சரிசெய்யும் நடவடிக்கையில் மின்சார சபை பொறியியலாளர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டலஸ் அழகப்பெரும, நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் தடை வழமைக்கு திரும்புவதற்கு சுமார் 2 மணிநேரம் வரையில் தேவைப்படுவதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்