இந்திய பாராளுமன்றில் தீ விபத்து

Published By: Digital Desk 3

17 Aug, 2020 | 01:45 PM
image

இந்தியாவின் டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாக இணைப்புக் கட்டிடத்தின் 6 ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து, 7 வாகனங்களில் , தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில்  தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தின் பிற பகுதிகளுக்கும் தீ பரவாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மின்கசிவு காரணமாக குறித்த தீ விபத்து இடம்பெற்றிருக்கலாமென சந்தேகிக்கும் பொலிஸார், விபத்து குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாராளுமன்ற கூட்டத்தொடருக்கான பணிகள் முழுவீச்சில் இடம்பெற்று வரும் நிலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் தான் முக்கியமான கட்சிகளின் ஆலோசனை கூட்டங்கள் இடம்பெறுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17