வற்வரி அதிகரிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு குறித்து பிரதமரின் கருத்து

Published By: Raam

11 Jul, 2016 | 06:28 PM
image

(ரொபட் அன்டனி)
வற்வரி அதிகரிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பானது அரசாங்கத்தின் வரி சேகரிக்கும் செயற்பாட்டில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என  நம்புகின்றோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

தேவையான மற்றும் பொருத்தமான சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரை வற்வரி அதிகரிப்பும், தேசத்தை கட்டியெழுப்பும் வரியை அமுல்படுத்தக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த தீர்மானமானது அரசாங்கத்தின் வரி சேகரிக்கும் செயற்பாட்டில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என எதிர்பார்க்கின்றேன். 

வற்வரி அதிகரிப்பு சட்டமூலமானது ஜூலை மாதம் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. 

தேசிய அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் தெளிவான பெரும்பான்மை பலம் இருக்கின்றது அந்தவகையில் இம் மாதம் இறுதிக்குள் சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம். அதன்பின்னர் 2016 மே மாதம் 2 ஆம் திகதியிலிருந்து இந்த சட்டமூலம் அமுலாகும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50