சோமாலியத் தலைநகரில் அமைந்துள்ள உயர் மட்ட ஹோட்டல் ஒன்றில் அல்-ஷபாப் ஆயுதக் குழுவினர் நடத்திய துப்பாக்கி மற்றும் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் இந்த தாக்குதலினால் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தற்கொலை கார் குண்டுவெடிப்புடன் தொடங்கிய அல்-ஷபாப் குழுவினருக்கும் பாதுகாப்பு படையினருக்கு இடையில் சுமார் மூன்று மணி நேரம் பரஸ்ரப துப்பாக்கி சூடு முன்னெடுக்கப்பட்டதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் முக்தார் உமர் தெரிவித்துள்ளார்.
பலியான 12 பேரில் இரண்டு அரச ஊழியர்கள், மூன்று ஹோட்டல் பாதுகாப்பு காவலர்கள், நான்கு பொதுமக்கள் மற்றும் அடையாளம் தெரியாத மூன்று பேர் உள்ளனர் என்று பொலிஸ் அதிகாரி அஹமட் பஷானே சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தாக்குதல் நடத்திய நான்கு பேரும் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டதாக முக்தார் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
ஹேட்டலின் பாதுகாப்பு வாயில்களில் சக்திவாய்ந்த கார் குண்டு வெடிப்பால் தாக்குதல் தொடங்கியது, பின்னர், துப்பாக்கி ஏந்தியவர்கள் ஹோட்டல் உள்ளே நுழைந்து பிணைக் கைதிகளை அழைத்துச் சென்றனர், பெரும்பாலும் அங்கு இளைஞர்கள் மற்றும் பெண்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
தாக்குதல் தொடங்கியபோது மின் தடை ஏற்பட்ட பகுதியில் ஆம்புலன்ஸ் சத்தங்கள் கேட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM