(இராஜதுரை ஹஷான்)
13வது அரசியலமைப்பின் ஊடாக மாகாண சபை முறைமை பலவந்தமாக உருவாக்கிக்கொள்ளப்பட்டது. மாகாண சபை தேர்தலை துரிதமாக நடத்த வேண்டும் என கடந்த அரசாங்கத்தில் அதிகாரத்தில் இருந்த தமிழ் அரசியல்வாதிகள் குரல் கொடுக்கவில்லை. மாகாண சபை தேர்தலை நடத்துவதில் உள்ள சட்ட மற்றும் பொது சிக்கல்களுக்கு தீர்வு கண்டு மாகாண சபை தேர்தல் முதலாம் காலாண்டுக்குள் நடத்தப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் இராஜாங்க அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இனப்பிரச்சினைகளுக்கு தீர்வாகவே அரசியலமைப்பின் 13வது திருத்தத்தில் மாகாண சபை முறைமை பலவந்தமாக உருவாக்கிக் கொள்ளப்பட்டது. தமிழ் மக்களின் அரசியல் உரிமை மாகாண சபை முறைமையின் ஊடாக வழங்கப்பட்டது. அதனை கடந்த அரசாங்கம் பாதுகாக்கவில்லை. மாகாண சபை தேர்தலை நடத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் நிச்சயம் தோல்வியடைவோம் என்பதை நன்கு அறிந்து பிரதமர் தேர்தலை நடத்தினார்.
மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டதன் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் தங்களுக்கான அரசியல் பிரதிநிதிகளை தெரிவு செய்துக் கொண்டார்கள். அது அவர்களின் ஜனநாயக அடிப்படை உரிமையாகும். தமிழ் மக்கள் தீர்மானித்த அரசியல் உரிமைகளை கடந்த அரசாங்கம் பாதுகாக்க தவறியது.
மாகாண சபைகள் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. மாகாண சபை தேர்தல் ஏனைய மாகாணங்களை தவிர வடக்கு மற்றும் கிழக்குமாகாணங்களுக்கு முக்கியமானதாக இருந்தது மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த கடந்த அரசாங்கத்தில் அதிகாரத்தில் இருந்த தமிழ் அரசியல்வாதிகள் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. சுயநல அரசியல் தேவைகளுக்காக தமிழ் மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுத்தார்கள்.
13வது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சில விடயங்கள் நாட்டுக்கு எதிராக உள்ளது. அவற்றை நிச்சயம் திருத்தம் செய்வோம். காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் ஒருபோதும் எந்த மாகாணங்களுக்கும் வழங்கமாட்டோம். அதற்கான சூழல் ஏதும் தோற்றம் பெறவில்லை.
காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டிய கடமைய அரசாங்கத்துக்கு உண்டு தேர்தலை நடத்துவதில் உள்ள சட்ட மற்றும் பொது சிக்கல் நிலைமைகளுக்கு தீர்வு கண்டு அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM