(ஆர்.ராம்)
இலங்கை தமிழரசுக்கட்சியின் அடுத்த கட்ட அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் அக்கட்சியின் தலைவர் மாவை.சோனாதிராஜாவும், வெளிவிவகாரங்களுக்கான செயலாளரும், பாராளுன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் யாழ்.குடாநாட்டு வைத்தியர்கள் குழுவொன்றுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
யாழ்.கச்சரியடிப்பகுதியில் அமைந்துள்ள விடுதியொன்றில் நேற்றுமுன்தினம் இரவு நேர விருந்துபசாரத்துடன் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா தெரிவிக்கையில்,
எமது அடுத்த கட்ட அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடொன்றை வைத்தியர்கள் குழுவொன்று செய்திருந்தது. அவர்கள் விருந்துபசாரத்துடன் அந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தனர்.
குறிப்பாக, தேர்தல் முடிவுகளின் பின்னர் தமிழர் தரப்பு நிலைமைகள், கட்சியின் பின்னடைவுகள், அடுத்த கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள், கட்சி மறுசீரமைப்பு, மக்கள் கலந்துரையாடல்கள் என்று பல்வேறு விடயங்கள் பற்றி அவதானத்தினை செலுத்தியிருந்தோம் என்றார்.
இதேவேளை, இதையொத்த கருத்தினையே பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் தெரிவித்துள்ளார்.
எனினும், அண்மைய நாட்களில் தேசியப்பட்டில் விவகாரம், தமிழரசுக்கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு தலைமையே காரணம் என்று சுமந்திரன் தெரிவித்தமை, மாவை.சேனாதிராஜாவின் புதல்வர் மீது சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு வைத்தமை, சிறிதரன் தலைமைப்பொறுப்பினை ஏற்றால் அதற்கு ஆதரவளிப்பதற்கு தயாராக இருப்பதாக கூறியமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களால் மாவை.சேனாதிராஜாவுக்கும், சுமந்திரனுக்கும் இடையில் முறுகல் நிலைமைகள் ஏற்பட்டிருந்தன.
அதுமட்டுமன்றி இரு தரப்பும் அணியாக பிரிந்து நிற்குமளவிற்கு முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. இவ்வாறான நிலையில் சமகால அரசியல் சூழமைவில் கட்சிக்குள் முரண்பட்டு பிளவுபட்டு நிற்பதை விடவும் ஒற்றுமையாக இருப்பதன் அவசியத்தினை வலியுறுத்தும் வகையிலேயே வைத்தியர் குழுவினர் இந்த ஏற்பாட்டினை மேற்கொண்டுள்ளதாக அறிய முடிகின்றது.
குறிப்பான யாழ்.பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தின் தலைவர் வைத்தியர் ரவிராஜ் இந்த ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான வைத்திய குழுவின் பிரதான பங்கினை ஆற்றியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன்போது, மாவை, சுமந்திரன் தரப்பினை சமரசம் செய்யும் வகையில் பல்வேறுவிதமான கருத்துக்களும், ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டதாக இக்கலந்துரையாடலில் பங்கேற்ற பெயர் குறிப்பிட விரும்பாத வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தமிழ் சமூகத்தின் நலனை அடிப்படையாகக் கொண்ட ஒரு மூடிய அறை கலந்துரையாடலாகவே இதனை பேணுவதற்கு தமது தரப்பு அதிக சிரத்தையினைக் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM