இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 65 ஆயிரத்து 2 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 இலட்சத்து 26 ஆயிரத்து 193 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 6 இலட்சத்து 68 ஆயிரத்து 220 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து 57 ஆயிரத்து 382 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.
இதனால் இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 18 இலட்சத்து 8 ஆயிரத்து 937 ஆக அதிகரித்துள்ளது. இதனால் குணமடைந்தோர் சதவிகிதம் 71.61 என்ற அளவில் உள்ளது.
ஆனாலும், கொரோனாவினால் கடந்த 24 மணி நேரத்தில் 996 பேர் பலியாகியுள்ளனர்.
இதனால் இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 36 ஆக அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா இறப்பு சதவிகிதம் 1.94 என்ற அளவில் உள்ளது.
இதனால் இந்தியாவில் இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2 கோடியே 85 இலட்சத்து 63 ஆயிரத்து 95 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM