கொழும்பில் சட்டவிரோத அச்சகத்தை நடத்தியவர் கைது : பல இறப்பர் முத்திரைகள் மீட்பு

14 Aug, 2020 | 09:05 PM
image

(செ.தேன்மொழி)

பொரளை பகுதியில் சட்ட விரோத அச்சகம் ஒன்றை நடத்திச் சென்றதாக கைது செய்யப்பட்ட நபர் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

பொரளை  பகுதியில் மேல்மாகாணத்தின் ஊழல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத அச்சகம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உத்தியோகபூர்வ ஆவணங்களை பெற்றுக் கொள்ள முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்போது பொரளை - கஜபாபுர பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவர் தனது வீட்டின் மேல் மாடியிலேயே இந்த அச்சகத்தை நடத்திச் சென்றுள்ளார். 

இதன்போது குறித்த அச்சகத்திலிருந்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 23 பேருக்கு சொந்தமான உத்தியோக பூர்வ இறப்பர் முத்திரைகளும் , பல்வேறு பகுதிகளிலும் உள்ள சமாதான நீதிவான்களுக்கு சொந்தமான 43 இறப்பர் முத்திரைகளும் , 5 சட்டவிரோத சாரதி அனுமதிப்பத்திரங்களும் , வருமான அனுமதிப்பத்திரம் , விவசாய பணிப்பாளர் நாயகத்தின் இறப்பர் முத்திரை , மோட்டார் வாகன ஆணையாளரின் இறப்பர் முத்திரை என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை பிறப்பு சான்றிதழ்கள் , பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்யும் மாதிரி அறிக்கைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. 

சந்தேக நபர் பொரளை பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் , அவர் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொரளை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியால் மேற்கொள்ளபட்டு வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24