இராணுவம் தாக்குதல் : இளைஞர் படுகாயம் - மன்னாரில் சம்பவம்

14 Aug, 2020 | 08:32 PM
image

சடலம் ஒன்றை தகனம் செய்ய கொண்டு செல்லப்பட்ட போது பட்டாசு கொளுத்தியவர்கள் மீது மன்னாரில் இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சன்னார் கிராமத்தில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் தகனக் கிரிகைகளுக்காக பொது மாயனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட போது , பள்ளமடு சந்தியில் வைத்து இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை(14) மாலை 3.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சன்னார் கிராமத்தில் உயிரிழந்த நபர் ஒருவரின் இறுதிக் கிரிகைகளுக்காக சடலம் அவரது இல்லத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை மாலை 2.30 மணியளவில் எடுத்துச் செல்லப்பட்டு விடத்தல் தீவு பகுதியில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதன்போது பட்டாசு கொளுத்தப்பட்டு சடலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

இதன் போது பள்ளமடு சந்தியூடாக சடலம் கொண்டு செல்லப்பட்ட போது பட்டாசு கொளுத்தியவர்கள் என்ற குற்றச்சாட்டில் பள்ள மடு சந்தியில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் தாக்குதலை மேற்கொண்டனர்.

மரணச்சடங்கில் கலந்து கொண்டிருந்த சுமார் 7 பேர் மீது இராணுத்தினர் துப்பாக்கியினால் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதன் போது 24 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் கடமையில் இருந்த இராணுவத்தினரின் குறித்த நடவடிக்கைகள் குறித்து அப்பகுதி மக்கள் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21