(இராஜதுரை ஹஷான்)
வில்பத்து காடழிப்பு விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கை வெகுவிரைவில் பகிரங்கப்படுத்தப்படும், குற்றவாளிகளுக்கும் தண்டனை வழங்கப்படும். வனஜீவராசிகள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் சீர்திருத்தம் செய்யப்படும். இயற்கை வளங்களை பாதுகாப்பது குடிமக்களின் முதல் கடமையாகும் என வனஜீவராசிகள் பாதுகாப்பு மற்றும் வனவளத்துறை அமைச்சர் சி. பி. ரத்னாநயக்க தெரிவித்தார்.
வனவஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சில் இன்று கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தில் வனஜீவராசிகள் பாதுகாப்பு தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தில் வனவளத்துறை பாதுகாப்பிற்கு பிரத்தியேகமான இடம் வழங்கப்பட்டுள்ளது.
வனவளத்துறை பாதுகாப்பு தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் திருத்தம் செய்யப்படும். இயற்கை வளத்தை பாதுகாக்கும் பொறுப்பினை ஒரு நிறுவனத்திற்கு மாத்திரம் பொறுப்பாக்க முடியாது. இயற்கையை பாதுகாப்பது நாட்டு மக்களின் முதல் கடமையாகும். இயற்கை வளம் பாதுகாக்கப்பட்டால் மாத்திரமே ஆரோக்கியமாக வாழலாம்.
வில்பத்து காடழிப்பு விவகாரம் இயற்கை வளத்திற்கு பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்வபம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆகவே விசாரணை தொடர்பான அறிக்கைகளை வெகுவிரைவில் பகிரங்கப்படுத்துவேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM