வில்பத்து காடழிப்பு விவகாரம்: குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என்கிறார் சி. பி. ரத்னாநயக்க   

Published By: J.G.Stephan

14 Aug, 2020 | 07:10 PM
image

(இராஜதுரை ஹஷான்)

வில்பத்து  காடழிப்பு  விவகாரம்  தொடர்பான விசாரணை அறிக்கை வெகுவிரைவில் பகிரங்கப்படுத்தப்படும், குற்றவாளிகளுக்கும் தண்டனை வழங்கப்படும். வனஜீவராசிகள் பாதுகாப்பு  தொடர்பான  சட்டங்கள்  சீர்திருத்தம் செய்யப்படும்.  இயற்கை  வளங்களை   பாதுகாப்பது குடிமக்களின் முதல் கடமையாகும் என வனஜீவராசிகள் பாதுகாப்பு மற்றும் வனவளத்துறை அமைச்சர் சி. பி. ரத்னாநயக்க தெரிவித்தார்.

 வனவஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சில் இன்று கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில்  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ  தலைமையிலான புதிய அரசாங்கத்தில் வனஜீவராசிகள்  பாதுகாப்பு தொடர்பில்  உரிய  கவனம் செலுத்தப்பட்டுள்ளது.  சுபீட்சமான எதிர்கால கொள்கை  திட்டத்தில் வனவளத்துறை பாதுகாப்பிற்கு பிரத்தியேகமான இடம்  வழங்கப்பட்டுள்ளது.

  வனவளத்துறை பாதுகாப்பு தொடர்பில் தற்போது  நடைமுறையில் உள்ள சட்டங்கள் திருத்தம் செய்யப்படும். இயற்கை வளத்தை  பாதுகாக்கும் பொறுப்பினை ஒரு  நிறுவனத்திற்கு மாத்திரம் பொறுப்பாக்க முடியாது. இயற்கையை பாதுகாப்பது  நாட்டு மக்களின் முதல் கடமையாகும்.    இயற்கை வளம் பாதுகாக்கப்பட்டால் மாத்திரமே ஆரோக்கியமாக வாழலாம்.

வில்பத்து காடழிப்பு விவகாரம் இயற்கை வளத்திற்கு பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.       இச்சம்வபம் தொடர்பில்  உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆகவே விசாரணை  தொடர்பான அறிக்கைகளை வெகுவிரைவில் பகிரங்கப்படுத்துவேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33