(எம்.ஆர்.எம்.வஸீம்)
ஆரோக்கியமான பயணிகள் போக்குவரத்து சேவை ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம். அதற்காக புதிய பஸ்களை போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்துவோம் என போக்குரவத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள காமினி லொக்குகே நேற்று பத்தரமுள்ளையில் அமைந்துள்ள போக்குவரத்து அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதியின் செளபாக்கிய நோக்கு வேலைத்திட்டத்தை முன்னுக்கொண்டுசெல்ல மக்கள் தேர்தலில் அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கி இருக்கின்றனர். மக்கள் ஆணையை பயன்படுத்திக்கொண்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் மேற்கொண்டுவரும் வேலைத்திட்டத்தை வெற்றியடைச் செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டிய பொறுப்பு எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.
அதன் பிரகாரம் நாட்டின் போக்குவரத்துதுறை மிகவும் முக்கியமானதொன்றாகும். பொது மக்களுடன் தொடர்புபட்டதொன்று என்றபடியால், ஆரோக்கியமான பயணிகள் போக்குவரத்து சேவை ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம். அதற்காக புதிய பஸ்களை போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்திக்கின்றோம்.
அத்துடன் மக்கள் போக்குவரத்துக்கு புதிய பஸ்கள் இறக்குமதி செய்யும் எந்த திட்டமும் இல்லை. கொரோனா தொற்று காரணமாக நாட்டில் சுற்றுலாதுறை மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது. சுற்றுலா துறைக்காக புதிய பஸ்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. அந்த பஸ்களை பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்த இருக்கின்றோம். அதேபோன்று முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த அமைச்சில் பல முக்கியமான வேலைத்திட்டங்களை தொடங்கி இருந்தார். அந்த வேலைத்திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்வேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM