சீனா ஆரம்பித்துள்ள பிரசார நடவடிக்கை என்ன ? 

Published By: Digital Desk 3

13 Aug, 2020 | 04:48 PM
image

சீனா உணவு வீண்விரயத்தை தடுக்கும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வீணான தொகையை "அதிர்ச்சியூட்டும் மற்றும் துன்பகரமான" என்று அழைத்ததை அடுத்து, சீனா உணவு வீண்விரயத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

கொரோனா உணவு வீண்விரயங்கள் குறித்து "அலாரம் ஒலித்தது" என ஷி ஜின்பிங் சிறப்பித்த பின்னர் " தூய்மையான தட்டு பிரச்சாரம்" (Clean Plate Campaign) தொடங்கப்பட்டுள்ளது.

சீனா "உணவுப் பாதுகாப்பு குறித்து நெருக்கடி உணர்வைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

தெற்கு சீனா முழுவதும் பல வாரங்களாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்குப் பின்னர் இது நடைமுறைக்கு வருகிறது.

சீனாவில் வெள்ளப்பெருக்கினால் பண்ணைகள் சிதைவடைந்துள்ளதுடன் தொன் கணக்கான விளைச்சல் நாசமாக்கியுள்ளது.

சீன அரசின் செய்தி நிறுவனமான குளோபல் டைம்ஸ், சீனா ஒரு உணவு நெருக்கடிக்கு வழிவகுத்தது என்று "மீடியா ஹைப்" என்று அழைக்கப்பட்டதை குறைத்து மதிப்பிட முயன்றது. இது தொற்றுநோயால் மோசமடைந்தது.

தாங்கள் பெரிய அளவில் உண்பதை படமாக்கிய நேரலை காணொளிகளை  எடுத்தவர்களை மாநில தொலைக்காட்சி விமர்சித்துள்ளது.

சீன ஜனாதிபதியின் கருத்தை தொடர்ந்து , வுஹான் நகரிலுள்ள கேட்டரிங் கைத்தொழில் சங்கம் உணவகங்களில்  வழங்கப்படும் உணவுகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி ஒரு அமைப்பை செயல்படுத்துகிறது.

இந்நிலையில், “N-1” என அழைக்கப்படும் இந்த அமைப்பின் கீழ், 10 பேர் கொண்ட குழு 9 உணவுகளை மட்டுமே ஓடர் செய்ய முடியும்.

ஆனால், தேவைக்கு அதிகமானதை விட அதிகமாக ஓடர் செய்வது கண்ணியமாகக் கருதப்படும் ஒரு நாட்டில், இந்த அமைப்பு வீண்விரயத்தை சரிசெய்ய நேரம் எடுக்கும்.

"N-1" யோசனை இணையத்தில் சில விமர்சனங்களை எதிர்கொண்டது, சிலர் இது "மிகவும் கடுமையானது" என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

சீன அரசு நிறுவனமான சி.சி.டி.வி நேரலை காணொளிகளில்  பொதுவாக  அதிக அளவு உணவை உண்ணுகின்றார்கள் என தெரிவித்துள்ளது.

பொதுவாக "முக்பாங்" என்று அழைக்கப்படுகிறது - இதுபோன்ற நேரலை காணொளிகள் சீனா உட்பட ஆசியாவின் பல பகுதிகளில் பிரபலமாக உள்ளது.

சி.சி.டி.வி கருத்து படி, இந்த நேரலை காணொளிகளில் சிலர் சாப்பிட்ட உணவை அதிக அளவில் ஜீரணிக்க முடியாததால் பின்னர் தூக்கி எறிந்து விடுகிறார்கள்.

சீனா உணவு வீண்விரய எதிர்ப்பு பிரச்சாரத்தை தொடங்குவது இது முதல் முறை அல்ல.

2013 ஆம் ஆண்டில், "செயற்படு வெற்று தட்டு" (Operation Empty Plate) பிரச்சாரம் தொடங்கப்பட்டது - இது பொதுமக்களின் மீது சுமத்தப்படுவதை விட, அதிகாரிகளால் நடத்தப்பட்ட ஆடம்பரமான விருந்துகள் மற்றும் வரவேற்பை இலக்காகக் கொண்டது.

சீனாவின் உலக வனவிலங்கு நிதியத்தின் கூற்றுப்படி, 2015 ஆம் ஆண்டில் சீனாவில் சுமார் 17 முதல் 18 மில்லியன் டொன் உணவு வீணாகப்பட்டதாக பிபிசி தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10