(இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் எதிர்வரும் 19ம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெறவுள்ளது. எதிர்வரும் 17ம் திகதிக்கு முன்னர் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் கடமைகளை பொறுப்பேற்க வேண்டும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பொறுப்பேற்றல் நேற்று இடம்பெற்றது. 28, அமைச்சுக்கள். 40 இராஜாங்க அமைச்சுக்கள் மற்றும் 25 மாவட்டங்களுக்கான குழு தலைவர் பதவிகளுக்கான நியமனங்கள் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டன.
புதிய அமைச்சரவையின் கன்னி கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. வழமைக்கு மாற்றீடாக பல புதிய அம்சங்கள் முதலாவது அமைச்சரவையில் முன்னெடுக்கப்படவுள்ளது.
25 அமைச்சர்கள் மற்றும் 39 இராஜாங்க அமைச்சர்களும் எதிர்வரும் 17ம் திகதி அதாவது திங்கட்கிழமைக்கு முன்னர் தங்களின் கடமைகளை பொறுப்பேற்க வேண்டும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். 16ம் திகதிக்கு முன்னர் அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர்களும் தங்களின் கடமைகளை துரிதமாக பொறுப்பேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
9வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் வியாழக்கிழமை 20ம் திகதி கூடவுள்ளது. சபாநாயக்கர் மற்றும் பிரதி சபாநாயக்கர் ஆகிய முக்கிய பதவிகள் குறித்து அன்றையதினம் கவனம் செலுத்தப்படும். சபாநாயகர் பதவிக்கு பல்வேறு தரப்பினரது பெயர்கள் இதுவரையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM