பருத்தித்துறை கடற்பரப்பில் மிதந்து வந்த நிலையில் 294 கிலோ கஞ்சா இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது மர்மமான பொதிகள் கடலில் மிதந்து வந்ததை கடற்படையினர் அவதானித்துள்ளனர்.
இதன்போது குறித்த பொதிகளை கடற்படையினர் சோதனையிட்ட போது அதற்குள் கஞ்சா போதைபொருள் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட கஞ்சா போதைப் பொருட்கள் 294 கிலோ எடை உடையவை என கடற்படையினர் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் அனைத்தும் பருத்தித்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM