(ஆர்.யசி)
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
அமைச்சரவை அமைச்சர்களாக 26 பேரும், இராஜாங்க அமைச்சர்களாக 39 பேரும் நியமிக்கப்பட்டனர். எனினும் இம்முறை அமைச்சுப்பதவிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட முக்கிய சிலருக்கு அமைச்சுப்பதவிகளோ, இராஜாங்க அமைச்சுப் பதவிகளோ வழங்கப்படவில்லை,
அந்த பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மகாவலி அபிவிருத்தி அமைச்சு வழங்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இம்முறை பொதுத் தேர்தலில் பொலனறுவை மாவட்டத்தில் (111,137 வாக்குகள்) அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார். அதேபோல் அவருக்கு சபாநாயகர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையொன்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் முன்வைக்கப்பட்டிருந்தது. எனினும் அவருக்கு இன்றைய தினம் எந்தவொரு அமைச்சுப் பதவியும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
அதேபோல் இம்முறை தேர்தலில் வெற்றிபெற்றிருந்த மஹிந்த சமரசிங்க, ஜோன் செனவிரத்ன, மஹிந்த யாப்பா அபேவர்தன, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, டிலான் பெரேரா, அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜெயந்த, எஸ்.பி திசாநாயக, சந்திம வீரக்கொடி, விஜயதாச ராஜபக்ஷ ஆகியோருக்கும் எந்தவித அமைச்சுப்பொறுப்புக்களும் வழங்கப்பட்டிருக்கவில்லை. எவ்வாறு இருப்பினும் சபாநாயகர் பதவிக்கு மஹிந்த யாப்பா அபிவேர்தனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பு வட்டாரங்களில் பரவலாக தெரிவிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM