பதுளையின் மூத்த பத்திரிகையாளர் டி.எம். முருகையா தனது 94 ஆவது வயதில் நேற்று (11) பதுளை பொது வைத்தியசாலையில் காலமானார்.
வீரகேசரி, தினகரன் உட்பட சுமார் தேசிய பத்திரிகைகள் உள்ளிட்ட 14 பத்திரிகைகளில் கடமையாற்றிய இவர், 1972 காலப்பகுதியில் 18 வருடங்கள் வீரகேசரி பத்திரிகையின் உதவி ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.
அரசியல் ஆர்வம் மிகுந்த இவர் மலையக தொழிற்சங்கங்களான இ.தொ.கா. மற்றும் அசிஸ் ஜனநாயக காங்கிரஸ் என்பவற்றிலும் அங்கம் வகித்துள்ளார்.
ஆரம்ப காலங்களில் சிந்தாமணி பத்திரிகையில் உலகநோக்கு என்ற தொடரை எழுதி பிரபலம் பெற்றார். சமூக அக்கறையுடன் ஊடகப்பணி செய்த இவர் பத்திரிகை துறையில் முழு மூச்சாக ஈடுபட்டார்.
இவரது பூதவுடல் மகியாங்கனை வீதியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் நாளை (13) வியாழக்கிழமை பி.ப. 2 .00 மணிக்கு பதுளை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM