மூத்த பத்திரிகையாளர் டி.எம். முருகையா காலமானார்

Published By: Digital Desk 4

12 Aug, 2020 | 03:00 PM
image

பதுளையின் மூத்த பத்திரிகையாளர் டி.எம். முருகையா தனது 94 ஆவது வயதில் நேற்று (11) பதுளை பொது வைத்தியசாலையில் காலமானார். 

வீரகேசரி, தினகரன் உட்பட சுமார் தேசிய பத்திரிகைகள் உள்ளிட்ட 14 பத்திரிகைகளில் கடமையாற்றிய இவர், 1972 காலப்பகுதியில் 18 வருடங்கள் வீரகேசரி பத்திரிகையின் உதவி ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.

அரசியல் ஆர்வம் மிகுந்த இவர் மலையக தொழிற்சங்கங்களான இ.தொ.கா. மற்றும் அசிஸ் ஜனநாயக காங்கிரஸ் என்பவற்றிலும் அங்கம் வகித்துள்ளார்.

ஆரம்ப காலங்களில் சிந்தாமணி பத்திரிகையில் உலகநோக்கு என்ற தொடரை எழுதி பிரபலம் பெற்றார். சமூக அக்கறையுடன் ஊடகப்பணி செய்த இவர் பத்திரிகை துறையில் முழு மூச்சாக ஈடுபட்டார். 

இவரது பூதவுடல் மகியாங்கனை வீதியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் நாளை (13) வியாழக்கிழமை பி.ப. 2 .00 மணிக்கு பதுளை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30