விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்து வீரர் ஹென்டி முர்ரே 2ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
விம்பிள்டன் டென்னிஸ்
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் கடந்த இரு கிழமைகளாக லண்டனில் நடைபெற்றது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் 2ஆம் நிலை வீரர் இங்கிலாந்தின் ஹென்டி முர்ரேவும், 7ஆம் நிலை வீரர் மிலோஸ் ராவ்னிக்கும் (கனடா) மோதினர். அரைஇறுதியில பெடரருக்கு அதிர்ச்சியளித்த ராவ்னிக் மிகுந்த நம்பிக்கையுடன் களம் புகுந்தார்.
ஆனால் உள்ளூர் நாயகன் முர்ரேவின் அதிரடியான ஆட்டத்துக்கு ராவ்னிக்கால் முழுமையாக ஈடுகொடுக்க முடியவில்லை. இருப்பினும் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ராவ்னிக் கடும் சவாலளித்தார்.
முர்ரே சாம்பியன்
2 மணி 48 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் ஹென்டி முர்ரே 6–4, 7–6 (7–3), 7–6 (7–2) என்ற நேர் செட் கணக்கில் ராவ்னிக்கை வீழ்த்தி விம்பிள்டன் பட்டத்தை சொந்தமாக்கினார்.
இதன் மூலம் ராவ்னிக்கின் கனவு சிதைந்த போதிலும், கிராண்ட்ஸ்லாம் இறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் கனடா வீரர் என்ற பெருமையுடன் வெளியேறினார்.
29 வயதான முர்ரேவுக்கு இது 2ஆவது விம்பிள்டன் மகுடமாகும். ஏற்கனவே 2013ஆம் ஆண்டில் விம்பிள்டனை முதல்முறையாக கையில் ஏந்தினார். மொத்தத்தில் அவருக்கு இது 3ஆவது கிராண்ட்ஸ்லாம் ஆகும். 2012ஆம் ஆண்டில் அமெரிக்க ஓபன் பட்டத்தையும் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
வில்லியம்ஸ் சகோதரிகள் சாம்பியன்
பெண்கள் ஒற்றையரில் பட்டத்தை வென்று சாதனை படைத்த அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், இரட்டையர் பிரிவிலும் ஆதிக்கத்தை நிலை நாட்டினார். அவரும், அவரது சகோதரி வீனஸ் வில்லியம்சும் இணைந்து இரட்டையர் இறுதி ஆட்டத்தில் டைமியா பாபோஸ் (ஹங்கேரி)– ஷிவ்டோவா (கஜகஸ்தான்) இணையை எதிர்கொண்டனர்.
விறுவிறுப்பான இந்த மோதலில் வில்லியம்ஸ் சகோதரிகள் 6–3, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை தட்டிச் சென்றனர். இவர்கள் கூட்டாக இணைந்து பெற்ற 14–வது கிராண்ட்ஸ்லாம் இதுவாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM