அங்கொட லொக்காவின் குழுவுக்கு சுமார் 50 கோடி வரையில் சொத்துக்கள் ; அரச உடமையாக்க தீவிர விசாரணை; பலாத்காரமாக கைப்பற்றப்பட்ட காணிகள் தொடர்பில் முறையிடவும் வாய்ப்பு!

12 Aug, 2020 | 12:35 AM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

 இந்தியாவில் இறந்துவிட்டதாக நம்பப்படும் , பிரபல பாதாள உலக குழு தலைவன்  அங்கொட லொக்காவின் குழுவினருக்கு சொந்தமாக மேல் மாகாணத்துக்குள் மட்டும் 928 பேர்ச்சஸ் காணிகள் இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பலாத்காரமாகவும், போலி உறுதிகள் ஊடாகவும் அக்குழு இந்த காணிகளைக் கைப்பற்றியுள்ளதாக  நம்பப்படும் நிலையில்,  அது தொடர்பில் மேல் மாகாணத்தின் தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவூடாக விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்  ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

' இதுவரையில் அங்கொட லொக்கா தொடர்பிலான விசாரணைகளில் , அவரது குழு சட்ட விரோதமாக கைப்பற்றிக்கொண்டுள்ள 928 பேர்ச்சஸ்  காணிகள் தொடர்பில்  விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் அவர் களனி முல்லை மற்றும் அம்பத்தலே பகுதிகளில் சட்ட விரோத மணல் அகழ்வுகளையும் முன்னெடுத்துள்ளார். அவரது குழு ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ள  அந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட 4 ட்ரக் வண்டிகள், மணலை கரைக்கு கொண்டுவர பயன்படுத்தப்பட்டுள்ள வள்ளங்களும் மீட்கப்பட்டுள்ளன.

 அங்கொட லொக்கா சட்ட விரோத செயற்பாடுகள் ஊடாக சுமார் 50 இலட்சம் ரூபா வரை பணம், சொத்துக்களைச் சேர்த்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அது தொடர்பில் கருப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ' என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

 இதேவேளை, அங்கொட லொக்காவின் குழுவினரால் எவரது காணியேனும் பலாத்காரமாகவோ அல்லது போலி உறுதிகள் ஊடாகவோ கைப்பற்றப்பட்டிருக்குமானால் அவர்கள் மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர்  லலித் அபேசேகரவிடம் 071 8592279 எனும் இலக்கத்துக்கு அழைத்து முறையிட முடியும் எனவும்  பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08