மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா கைது!

Published By: Jayanthy

11 Aug, 2020 | 10:50 PM
image

தந்தையின் தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதியளிக்குமாறு பண்டாரமுல்லையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரை வற்புறுத்தியதுடன் அவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீன் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் பண்டாரமுல்லையைச் சேர்ந்த குறித்த தொழிலதிபர் இது குறித்து ஜூன் 16 ஆம் திகதி தலங்கம பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்க அமையவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலக்க சில்வா தனது நண்பராக குறித்த  தொழிலதிபரை ஜூன் 09 ஆம் திகதி தொலைபேசியில்  அழைத்து  தனது தந்தையின் தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதியளிக்குமாறு கோரியதாகவும், இதன் போது கொவிட் - 19 தொற்றுகாரணமாக தனது மீன் வர்த்தகம் நஷ்டத்தில் இயங்குவதாகவும், உரிய நேரத்தில் நிதி வழங்குவதாகவும் குறித்த தொழிலதிபர் மாலக்க  சில்வாவிடம் தெரிவித்திதுள்ளார்.

எனினும் மாலக்க சில்வா குறுந்தகவல் மற்றும் வாட்ஸ்அப் வழியாக தொழிலதிபரிடம் தொடர்ந்து நிதி கோரியதாகக் கூறப்படுகிறது, இறுதியில் கோபமடைந்த மாலக்க சில்வா ஜூன் 15 அன்று தொழிலதிபருக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40