ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் டைட்டில் ஸ்பொன்சராக விளம்பர ஒப்பந்தம் செய்ய பதஞ்சலி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 2018 முதல் 2022 வரையிலான டைட்டில் ஸ்பொன்சர் உரிமத்தை சீனாவின் வீவோ நிறுவனம் பெற்றிருந்தது. ஆனால் லடாக் பிரச்சினைக்குப்பிறகு சீனா பொருட்களை நிராகரிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.
இந்த பிரச்சினை பெரிதாகிய சமயம் ஐ.பி.எல். ஸ்பொன்சராக வீவோ தொடர்ந்து நீடிக்கும் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்தது. இதனால் சமூகவலைதளங்களில் பொங்கி எழுந்த நெட்டிசன்கள் ஐ.பி.எல். போட்டியை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், அரசியல் சார்பிலும், அமைப்புகள் சார்பிலும் மறைமுகமாக எதிர்ப்பு கிளம்பின.
இதனால், ஐ.பி.எல். ஸ்பொன்சர்ஷிப்பில் தொடர்பான ஒப்பந்தத்திலிருந்து வீவோ நிறுவனமும்-பிசிசிஐ-யும் விலகின. இந்த நடவடிக்கையால் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். டைட்டில் ஸ்பொன்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், காலியாக உள்ள ஐ.பி.எல். 2020 ஸ்பொன்சர் உரிமத்தை வாங்க சாமியார் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பதஞ்சலி நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ஐ.பி.எல். ஸ்பொன்சர் தொடர்பாக நாங்கள் ஆலோசித்து வருகிறோம். இது தொடர்பான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
ஆயுர்வேத பொருட்கள் தொடர்பான விற்பனையை செய்துவரும் பதஞ்சலி நிறுவனத்தின் 2018-19 ஆம் ஆண்டுக்கான வருமானம் இந்திய மதிப்பில் 8 ஆயிரத்து 329 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM