ஜூலை கடைசி இரண்டு வாரங்களில் சுமார் 97,000 சிறுவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் சிறுவர் சுகாதார ஸ்தாபனம் (American Academy of Pediatrics) ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஜூலை 16 முதல் ஜூலை 30 வரையான காலக் கட்டத்திலேயே அமெரிக்காவில் 97,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்ததாக ஸ்தாபனம் தனத அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்காவில் இதுவரை 5 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவற்றுள் 338,000 க்கும் அதிகமானவர்கள் சிறுவர்கள் ஆவர்.
ஜூலை மாதத்தில் மாத்திரம் அமெரிக்காவில் 25 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொரோனாவினால் உயிரிழந்தும் உள்ளனர்.
சிறுவர்களுக்கு கொரோனா பரவுவதில் பெரிதும் பங்களிப்பு செய்யும் காரணயாக பாடசாலைக் கல்வி முறைகள் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது இவ்வாறிருக்க அமெரிக்காவில் தற்போது உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,044,769 ஆக காணப்படுவதுடன், உயிரிழந்தவர்களின் தொகையும் 162,938 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 20 மில்லியனை நெருங்கி வருகிறது.
அதன்படி இதுவரை 19,780,612 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் சர்வதேச ரீதியில் 729,768 ஆக காணப்படுவதாக அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின் மூலம் அறியக்கூடியதாகவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM