எயார் ஏசியா பிலிப்பைன்ஸ், இலங்கையின் மத்தள விமான நிலையத்திற்கு மாலுமிகளை திருப்பி அனுப்பும் செயற்பாட்டுக்காக சிறப்பு விமானங்களை இயக்கத் தொடங்கியுள்ளது.
உலகளாவிய ரீதியில் மாலுமிகளை இடமாற்றுவதற்கு ஏதுவாக இலங்கை அமைந்துள்ளமையினால் இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முதல் எயார் ஏசியா பிலிப்பைன்ஸ் விமானம் 13 வெளிநாட்டு மாலுமிகளுடன் நேற்று பிற்பகல் 1.50 மணியளவில் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
எயார் ஏசியா பிலிப்பைன்ஸ் இ.சட் 28161 என்ற இந்த விமானம் இன்று 14 பிலிப்பனைன்ஸ் மாலுமிகளுடன் இங்கிருந்து பிற்பகல் 2.15 மணியளவில் பிலிப்பைன்ஸ் நோக்கிப் புறப்படவுள்ளது.
கொவிட்-19 தொற்றுநோய் நாட்டிற்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், கப்பல்களின் பாதுகாப்பான செயல்பாட்டிற்கு முக்கியத்துவம் வாய்ந்த கப்பல் குழுவினரை மாற்றுவதற்கு வசதியான இடமாக இலங்கை சர்வதேச கப்பல் சமூகத்தின் மத்தியில் இந்த நடவடிக்கையின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜூன் இறுதி வாரத்திலிருந்து 50 க்கும் மேற்பட்ட திருப்பி அனுப்புதல் மற்றும் மாலுமிகள் குழு பரிமாற்ற விமானங்கள் மத்தளவிலிருந்து இயக்கப்படுகின்றன.
குழு மாற்றங்கள் இலங்கை சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதல்களின்படி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM