(ஆர்.ராம்)
9ஆவது பாராளுமன்றத்தினை 11 பெண்களே பிரதிநித்துவப்படுத்தவுள்ளனர். தடைபெற்று நிறைவடைந்த தேர்தலில் பொதுஜனபெரமுனவின் சார்பில் வைத்தியர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே, பவித்திரா வன்னியாராச்சி, கீதா குமாரசிங்க, ரஜிக்கா விக்கிரமசிங்க, முடித்த டி சொய்ஸா, கோகிலா குணவர்த்தன ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அக்கட்சிக்கு கிடைக்கப்பெற்ற 17 தேசியப்பட்டியல் ஆசனங்களில் இரண்டு சீதா ஆரம்பிபொல, மஞ்சுளா திஸாநாயக்க ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தலதா அத்துக்கோரள, ரோஹினி விஜயரத்ன ஆகியோர் தேர்தலில் நேரடியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு அக்கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஊடாக டயானா கமகே அங்கத்துவத்தினைப்பெற்றுள்ளார்.
மேலும், தமிழர் அரசியல் விடுதலைப் போராட்ட பயணத்தில் துணைவர்களை இழந்த விஜகலா மகேஸ்வரன், அனந்தி சசிதரன், சசிகலா ரவிராஜ் உள்ளிட்டவர்கள் போட்டியிட்டிருந்தபோதும் அவர்கள் தெரிவு செய்யப்படவில்லை. அத்துடன் வடக்கு கிழக்கு மலையகத்திலிருந்து இம்முறை எந்தவொரு பெண் அரசியல்வாதியும் வெற்றிபெற்று பாராளுமன்று செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM