வவுனியா கனகராயன்குளம் பகுதியில் புகையிரதத்துடன் மோதி யானை ஒன்று உயிரிழந்துள்ளதுடன், புகையிரதமும் தடம்புரண்டுள்ளது.
குறித்த சம்பவம் கனகராயன்குளம் ஆலங்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
யாழில் இருந்து கொழும்புநோக்கி பயணித்த புகையிரதம் கனகராயன்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது பாதையில் நின்றிருந்த யானையுடன் மோதி விபத்திற்குள்ளாகியது.
விபத்தில் யானை சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன், புகையிரதம் பாதையைவிட்டு விலகி தடம்புரண்டது. எனினும் அதிஸ்டவசமாக பயணிகளிற்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை.
சம்பவ இடத்திற்கு சென்ற கனகராயன்குளம் பொலிசார் மற்றும், வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விபத்து காரணமாக பலமணி நேர தாமதத்திற்கு பின்னரே புகையிரதம் தனது பயணத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM