(இராஜதுரை ஹஷான்)
ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு இம்முறை 64 புதிய பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
அதில் 53 பேர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
கம்பஹா மாவட்டத்தில் 6 பேர் பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளார்கள். கலாநிதி நாலக கொடஹேவா, சஹன் பிரதீப், கோகிலா ஹர்ஷனி குணவர்தன, நளின் ருவன்ஜீவ பிரனாந்து, மிலான் சஜித் ஜயதிலக, உபுல் மகேந்திர ஆகியோர் கம்பஹா மாவட்ட புதிய பிரதிநிதிகளாவர்.
கொழும்பு மாவட்ட புதிய பாராளுமன்ற உறுப்பினர்களாக மேஜர் பிரதீப் உதுகொட, மதுர விக்ரமநாயக்க, பிரேமநாத் சிறி தொலவத்த , ஜகத் குமார ஆகியோர் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளார்கள்.
களுத்துறை மாவட்ட புதிய பாராளுமன்ற உறுப்பினர்களாக சஞ்ஜீவ எதிரிமான்ன, அனுப பஸ்குவல் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். அநுராதபுர மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்ட மூவர் பாராளுன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
கலாநிதி சன்ன ஜயசுமன, உத்திக பிரேமரத்ன, எச். நந்தசேன, கே. ஜி. எஸ். குமார சிறி ஆகியோரும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் போட்டியிட்ட ரோஹன பண்டார விஜயசுந்தரவும் என நால்வர் உள்ளடங்குகிறார்கள்.
கண்டி மாவட்டத்தில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட வசந்த யாப்பா பண்டார, குணதிலக ராஜபக்ஷ, உதயன சமிந்த கிரிதிகொட ஆகியோர் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
நுவரெலியா மாவட்டத்தில் ஜீவன் தொண்டமான், மருதபாண்டி ராமேஷ்வரன், நிமல் பியதிஸ்ஸ ஆகியோரும். ஐக்கிய மக்கள் சக்தியில் உதய குமாரும் வெற்றிப் பெற்றுள்ளார்கள்.
காலி மாவட்டத்தில் பொதுஜன பெரமுனசார்பில் சம்பத் அதுகோரல, இசுறு தொடங்கொட, சான் விஜயநாத் மாத்தறை மாவட்த்தில் நிபுண ரணவக்க, கருணாதாஸ கொடித்துவக்கு, வீரசுமன வீரசிங்க ஆகியோர் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உபுல் கலப்பத்தி, அஜித் ராஜபக்ஷ குருநாகலை மாவட்டத்தில் குனபால ரத்ன சேகர, அசங்க நவரத்ன, சமன்பிரிய ஹேரத், சுமித உடுகுபுர ஆகியோர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் கேகாலை மாவட்டத்தில் ராதிகா விக்ரமசிங்க, சுதத் மஞ்சுள, உதய காந்த குணதிலக ஆகியோரும், இரத்தினபுரி மாவட்த்தில் கமில் விலேகொட, அகில எல்லாவெல, மற்றும் மதீனா பிரசாந்த் சொஸ்சா ஆகியோரும் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM