இந்தியாவின் கேரளாவில் நேற்று இடம்பெற்ற விமான விபத்து சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
டுபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு பயணித்த ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 என்ற விமானம் நேற்றையதினம் விபத்திற்குள்ளாகியது.
குறித்த விமானத்தில் 185 பயணிகள் மற்றும் 6 விமான பணிக்குழுவினர் என மொத்தம் 191 பேர் பயணித்துள்ளனர்.
கோழிக்கோடு விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் 10 ஆவது ஓடுதளத்தில் தரையிறங்க முற்பட்டபோது, ஓடுதளத்தில் இருந்து விலகி அருகில் உள்ள பள்ளத்தில் வீழ்ந்து குறித்த விமானம் விபத்துக்குள்ளானதில் விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்தது.
இதையடுத்த விமான விபத்தில் சிக்கியிருந்த அனைவரையும் மீட்ட படையினர் அவர்களை அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் 17 உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு இறந்தவர்களில் விமானி, துணை விமானியும் உள்ளடங்கியுள்ளனர்.
இதற்கிடையில், இந்த விபத்தில் விமானத்தில் உயிரிழந்த 17 பேர் தவிர ஏனையோர் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM