இந்தியாவில் ஒரே நாளில் 62,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுவே இந்தியாவில் ஒரே நாளில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள முதல் முறையாகும்.
கடந்த மாதம் ஜூலை 30 ஆம் திகதி முதல் ஒவ்வொரு நாளும் 50,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 62,538 பேர் கொரோானாவால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 886 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,027,074 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41,585 ஆகவும் அதிகரித்துள்ளதாக இந்திய சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் ஜூலை 16 ஆம் திகதி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டிய மூன்று வாரங்களுக்குப் பிறகு நேற்று வியாழக்கிழமை 2 இலட்சத்தை தாண்டியுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சின் தரவுகளின் படி, 607,384 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் 1,378,105 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். இது மீட்பு விகிதத்தை 67.98% ஆக உயர்த்தியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் இருந்து 49,769 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 2.07% என அமைச்சின் தரவு காட்டுகிறது.
சுறுசுறுப்பான மற்றும் மீட்கப்பட்ட வழக்குகளுக்கு இடையிலான இடைவெளி 770,721 ஆக விரிவடைந்துள்ளது.
ஏறக்குறைய 5 இலட்சத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் உள்ள உலகில் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்காவிற்கும், 2.8 இலட்சத்திற்கும் அதிகமா பாதிக்கப்பட்டுள்ள பிரேசிலுக்கும் பின்னால் இந்தியா உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM