(செ.தேன்மொழி)
கடுவல - நவகமுவ பகுதியில் சட்டவிரோத ஆயுதங்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனேவத்த வீதி போம்பிரிய பகுதியில் நேற்று வியாழக்கிழமை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
திட்டமிட்ட குற்றச் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் சோதனை நடவடிக்கைகளுக்கமைய , பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கனேவத்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றை சோதனைக்குட்படுத்திய போதே குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கடுவெல - போம்பிரிய , கனேவத்த பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவரிடமிருந்து 5 வாள்களும் , 14 தடைச் செய்யப்பட்ட கூரிய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்றதாக கூறப்படும்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும், இதன்போது அவரிடமிருந்து கைதுப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நவகமுவ பொலிஸார் சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM