லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இடம் பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பாக துறைமுக ஊழியர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவ நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
குறித்த வெடி விபத்தின் காரணமாக தலைநகரின் பெரும் பகுதி பேரழிவிற்குட்ப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை பெய்ரூட்டின் துறைமுகத்தில் ஒரு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 டொன் அம்மோனியம் நைட்ரேட் தீப்பிடித்தமையினாலே குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிவிபத்தில் சுமார் 130 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 50,000 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை குழுவுக்கு நான்கு நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக லெபனானின் வெளியுறவு அமைச்சர் வானொலியில்நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
இந்நிலையில், இராணுவ நீதிமன்ற நீதிபதி பாடி அகிகி ஒரு அறிக்கையில், பெய்ரூட்டின் துறைமுகத்தில் 18 ஊழியர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்களில் 16 பேர் விசாரணையில் உள்ளனர். 16 பேரில் துறைமுக சுங்க அதிகாரிகள், பராமரிப்பு தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் மேலாளர்கள்
அதிக வெடிக்கும் பொருட்களின் இவ்வளவு பெரிய சரக்கு எவ்வாறு பல ஆண்டுகளாக பாதுகாப்பற்றதாக இருந்திருக்கும் என்று பலர் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
நேற்றைய தினம் வியாழக்கிழமை லெபனானுக்கு விஜயம் செய்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஒரு சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM