(எம்.ஆர்.எம்.வஸீம்)
கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் விருப்பு வாக்கை எண்ணுவதற்கு எடுக்கப்பட்டிருக்கும் முயற்சி சட்ட விரோதமானதாகும். இதுதொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறையிட்டிருக்கி்ன்றோம் என ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள விசேட அறிவிப்பொன்றிலேயே இவ்வறு தெரிவிக்கப்பட்டுள்ளது,
அரசியலமைப்பின் பிரகாரம் மற்றும் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் தேர்தலொன்றின்போது ஆசனம் ஒன்றுக்கு உரிமை போரமுடியுமாவது, 5வீதம் என்ற குறைந்தபட்ட விகிதாசாரத்தை பெற்றுக்கொள்ளும் கட்சி அல்லது குழுவுக்கு மாத்திரமாகும்.
என்றாலும் இந்த சட்டத்தை மீறி சட்டவிராதேமாகவும் விஞ்ஞான ரீதியற்ற முறையொன்றை ஏற்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியின் சட்ட பிரிவிவைச்சேர்ந்த ஒருசிலர் தலையிட்டு ரணில் விக்ரமசிங்கவின் விருப்பு வாக்குகளை எண்ணுவதற்கு முயற்சித்திருப்பதாக நம்பகமான தகவல் எமக்கு கிடைக்கப்பெற்றிருக்கின்றது.
கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி 5 வீத வாக்குகளை எட்டமுடியாத நிலையில், மாவட்டத்தின் மொத்த பெறுபேற்றை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பிரிப்பதன் மூலம் பெறப்படும் பகுதியை இலக்காகக்கொண்டு, சட்டவிராேதமாகவும் அரசியலமைப்புக்கு முரணாகவும் ரணில் விக்ரமசிங்கவின் விருப்பு வாக்குகளை எண்ணுவதற்கு மேற்கொள்ளும் முயற்சிக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கின்றது.
இந்த மோசமான நடவடிக்கை தொடர்பாக கொழும்பு மாவட்ட செயலாளரிடம் வினவியபோது, விருப்பு வாக்கு எண்ணப்படுவதாகவும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் தொகை தொடர்பாக எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டார். என்றாலும் எமது விவாதமாக இருப்பது, சட்ட முறைப்படி இவ்வாறு விருப்பு வாக்கு எண்ண முடியாது. இதுதொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறையிட்டிருப்பதுடன் சட்ட ரீதியிலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM