இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங் கள் குறித்து விசாரணை செய்யும் விசார ணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளின் உள்ளடக்கம் தொடர்பில் ஜெனீவா தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேச நீதிபதிகளின் உள்ளடக்கம் தொடர்பில் எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது நிலைமை நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
நிலைமையைச் சீர் செய்வதற்காக முன் னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருக்கிடையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரில் பொறுப்புக் கூறல் விடயத்தில் இலங்கையின் முன்னேற்றங்கள் குறித்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பாராட்டுக்களை தெரிவித்தப்போதிலும் விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளின் உள்ளடக்கம் தொடர்பில் கேள்வியெழுப்பியிருந்தனர். அதாவது இலங்கையின் இறுதிக்கட்ட போரின் போது நடைப்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணை சர்வதேச நீதிபதிகள் உள்ளடங்களான கலப்பு நீதி மன்றமாக அமைய வேண்டும் என ஜெனீவா தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன கலப்பு நீதி மன்றத்திற்கு கடும் எதிர்ப்பை பல முறை வெளியிட்டிருந்தார். மறுப்புறம் வெளிவிவகார அமைச்சர் கலப்பு நீதி மன்றத்தை ஆதரிக்கும் வகையிலும் நல்லாட்சி இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஜெனீவாவில் தெரிவித்திருந்தார். அதே போன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நிலைப்பாடும் ஜெனீவா தீர்மானத்திற்கு ஒத்துப்போகின்ற நிலையில் நல்லாட்சி அரசாங்கத்திற்குள் மாறுப்பட்ட நிலைப்பாடுகளும் கருத்து மோதல்களும் மேலோங்கியுள்ளன. தான் ஜனாதிபதியாக இருக்கும் வரையில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிப்பதில்லை என நேற்று முன்தினம் பாணந்துறை நகரசபை விளையாட்டரங்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து நல்லாட்சி அரசாங்கத்திற்குள் மேலும் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் உயர் மட்ட பேச்சு வார்த்தைகளுக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM