கேகாலையில் கத்தி குத்து : இளைஞர் பலி

Published By: Digital Desk 4

06 Aug, 2020 | 01:51 PM
image

(செ.தேன்மொழி)

கேகாலை நகரத்தில் இளைஞர்கள் சிலருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இடம்பெற்ற மோதலில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன், இன்னுமொருவர் காயமடைந்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.

கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நகர் பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு 11.30 மணியளவில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவத்தின் போது இளைஞர்கள் சிலருக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதுடன், இதன்போது இளைஞன் ஒருவன், அங்கிருந்த இளைஞர்கள்  இருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து படுகாமடைந்த இளைஞர்கள் இருவரும் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் , அவர்களுள் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் ; தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்றுவருகின்றார்.

கேகாலை - வின்சன் விக்கிரமசிங்க மாவத்தையை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

சம்பவத்தின் பின்னர் தப்பிச் சென்றிருந்த 24 வயதுடைய இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக  விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11