பாதாள உலக குழு உறுப்பினர் ‘எஸ்.எஃப். லொக்கா’ என அழைக்கப்படும் எரோன் ரணசிங்க கொலை வழக்கில் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்து உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற இடத்தை ஆராய்ந்த பின்னர் சந்தேக நபர்களை உடனடியாக கைதுசெய்யுமாறு அனுதாரபுரம் தலைமை நீதிவான் பிரசன்ன சமரசிங்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
பாதாள உலக குழு உறுப்பினர் எஸ்.எஃப். லொக்கா (வயது 33) நேற்று அனுராதபுரத்தின் தஹியாகம பகுதியில் அடையாளம் தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அத்துடன் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஸ்.எஃப். லொக்காவுடன் வாகனத்தில் பயணித்த மேலும் ஒரு பெண் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அனுராதபுரத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு இரவு விடுதி ஒன்றில் வைத்து கராத்தே சாம்பியனான வசந்த சொய்சா கொலை செய்யப்பட்ட வழக்கில் எஸ்.எஃப். லொக்கா முக்கிய சந்தேக நபர் ஆவர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM