மட்டக்களப்பு மாவட்டத்தில் 76 வீத வாக்களிப்பு - முழுவிபரம் இதோ !

05 Aug, 2020 | 10:11 PM
image

தற்போது நடைபெற்று முடிந்த  பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 76.15 வீதம் வாக்களிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா புதன்கிழமை மாலை (5) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்...

கல்குடா தேர்தல் தொகுதியில் 76 வீதமும், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 78வீதமும், பட்டிருப்புத் தொகுதியில் 73 வீதமும் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரையும் கல்குடாவில் 89210 வாக்குகளும், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 144864 வாக்குகளும், பட்டிருப்பில் 68263 வாக்குகளுமாக 302328 வாக்குகளை மக்கள் பதிவு செய்திருந்தார்கள்.

கல்குடாவில் 28301 வாக்குகளும், மட்டக்களப்பு தொகுதியில் 40603 வாக்குகளும், பட்டிருப்பில் 25761 வாக்குகளுமாக மொத்தமாக 94665 வாக்குகளை மக்கள் அளிக்கப்படவில்லை. நடைபெற்ற தேர்தலில் மட்டக்களப்பில் எதுவித அசம்பாவிதங்களோ அல்லது வன்முறைகளோ பதிவு செய்யப்படவில்லை. 105 சாதாரண முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டது.

கடந்த 2015 பாராளுமன்ற தேர்தலில் 67வீதம் வாக்களிக்கப்பட்டதுடன் இம்முறை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 76.15 வீதமாக அதிகரித்துள்ளது. கொவிட்-19 பிரச்சனைக்கு மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வாக்களிப்பில் ஆர்வமாக வாக்களித்ததை காணக்கூடியதாகவுள்ளது.

நடைபெற்ற தேர்தல்களுக்கான வாக்குப்பெட்டிகள் தற்போது வாக்கெண்ணும் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டு வியாழக்கிழமை காலை 8.00 மணியளவில் வாக்கெண்ணும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது. மட்டக்களப்பு தொகுதிக்கான வாக்கெண்ணும் நிலையமாக மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரியும், பட்டிருப்பு தொகுதி, கல்குடா தொகுதிக்கான வாக்கெண்ணும் நிலையமாக மட்டக்களப்பு இந்துக்கல்லூரியும் பயன்படுத்தப்படவுள்ளது. மேலும் இத்தேர்தல் சுமுகமாக இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா  தகவல் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08