கிளிநொச்சி தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் உட்பட நால்வர் கைது!

05 Aug, 2020 | 09:56 AM
image

கிளிநொச்சி தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரான சந்தை வர்த்தகர் ஒருவர் உட்பட நால்வர் நேற்றிரவு (04)  பொலீஸ்,தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று செவ்வாய் கிழமை நள்ளிரவு குறித்த நால்வரும் மதுபோதையில் சுயேச்சைக் குழு  செயற்பாட்டாளர் ஒருவரின் வீட்டிற்கு கற்களால் எறிந்தும் வேலிகளை அடித்து உடைத்தும் பெரும் அட்டக்காசம் புரிந்துள்ளனர்.  

சரமாரியான கற்கள் வீட்டிற்குள் வீசப்பட்டதனால்  அச்சமடைந்த குழந்தைகள் பெண்கள்  தலைக் கவசகம் அணிந்தபடி  பாதுகாப்பாக வீட்டிற்குள் இருக்க வீட்டுரிமையாளர் உடனடியாக பொலீஸ் மற்றும் தேர்தல் முறைப்பாட்டுப் பிரிவுக்கு அறிவிக்க உடனடியாக அங்கு விரைந்த பொலீஸ் மற்றும் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்தில் மதுபோதையில் நின்ற நால்வரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தற்போது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31