நாட்டில் நாளை நடைபெற உள்ள பொது தேர்தலுக்காக மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தமாக 29 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் 24 மஸ்கெலியா பொலிஸ் பிரிவிலும் 5 நல்லதண்ணி பொலிஸ் பிரிவிலும் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இப்பகுதிகளில் கடும் காற்றுடனான மழை பெய்து வந்த போதும் இன்று மதியம் 2 மணியளவில் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு பெட்டிகள் வாக்கு சாவடிக்கும் கொண்டு செல்லப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
29 வாக்கு சாவடிகளுக்கும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் அந்தந்த வாக்கு சாவடிகளில் பணிபுரியும் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவகர் தவிர்ந்த ஏனையவர்கள் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
நாளை 5 ஆம் திகதி காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் மக்கள் வாக்களிக்க செல்ல முடியும் எனவும் கொரோனா தடுப்பு விதிகளின்படி முக கவசம், பேனை, அடையாள அட்டை வாக்களிக்க செல்லும் போது வாக்காளர் அட்டையை கொண்டு செல்லுமாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM