இலங்கையின் பாதாள குழு முக்கியஸ்தரான அங்கொட லொக்காவுக்கு உதவுவதற்கான போலியான ஆவணங்கள் தயாரித்த குற்றச்சாட்டில் இந்தியாவின் கோவையில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அங்கொட லொக்கா ஜூலை மாதம் முதல் வாரத்தில் கோவையில் உயிரிழந்த நிலையில் அவரது உடல் மதுரையில் தகனம் செய்யப்பட்டது.
அவரது உடல் மதுரைக்கு கொண்டு செல்ல பொலிஸார் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்த போது, அங்கொட லொக்காவின் முழு மோசடி நடவடிக்கை வெளச்சத்திற்கு வந்தது.
இந் நிலையில் இது தொடர்பான விசாரணையில் அங்கொட லொக்காவுடன் தங்கியிருந்தாக கூறப்படும் இலங்கை பெண்ணான அமானி தாஞ்சி, மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணும், திருப்பூரைச் சேர்ந்த ஒரு ஆணும் இவ்வாறு போலியான ஆவணங்களை தயாரித்தமைக்காக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பைச் சேர்ந்த அமானி தஞ்சி (27), மதுரைச் சேர்ந்த சிவகாமி சுந்தரி (36), தற்போது திருப்பூரில் வசித்து வரும் ஈரோடைச் சேர்ந்த எஸ்.தினேஸ்வரன் (32) ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை கோவை பீலமேடு பொலிஸார் கைது செய்தனர்.
அவர் இந்திய நாட்டவர் என்ற பெயரில் ஆதார் அட்டையைப் பெற்றமை. குற்றவியல் சதி மற்றும் ஆவணங்களை மோசடி செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக ஐ.பி.சி.யின் 120 பி, 177, 182, 202, 212, 417, 419, 466, 468 மற்றும் 471 ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM