ரணிலை பலப்படுத்துவதே சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் - இராதாகிருஷ்ணன்

02 Aug, 2020 | 08:50 AM
image

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பலப்படுத்துவதன் ஊடாகவே சிறுபான்மை தேசிய இனங்களின் இருப்பு பாதுகாக்கப்படும் என்பதோடு அபிலாஷைகளும் பூர்த்தியாகும் என்று முன்னாள் பிரதியமைச்சர் பெ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தள்ளார்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் தெரிவித்தள்ளதாவது,

தற்போதைய சூழலில் சிறுபான்மை தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம் மலையக மக்களின் இருப்பும், பாதுகாப்பும் மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தக்கூடிய ஒருயொரு தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே காணப்படுகின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் பழையன கழிந்து புதியன புகுந்துள்ளமையால் புத்தெழுச்சியுடன் இளைய தலைமுறையினர் பலர் அரசியல் பிரவேசம் அடைந்துள்ளார்கள். நீண்ட அனுபவம், அறிவாற்றல் கொண்ட ஒரு தலைமைத்துவத்தின் கீழ் இளைஞர்களின் பிரவேசம் அக்கட்சி எதிர்காலத்தில் இந்த நாட்டிற்க சிறந்த தலைமைத்துவத்தினை வழங்குவதையே கட்டியங்கூறி நிற்கின்றது.

மேலும் இந்த நாட்டில் இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு நிரந்தரமானதும், நியாயமானதுமான தீர்வொன்றை அழிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க என்ற முற்போக்கான, சுயநலனற்ற தலைமையினாலேயே முடியும். பிரஜா உரிமை விடயத்தில் சட்ட திருத்தத்த்தினை மேற்கொண்டு அவ்விடயத்திற்கு நியாயமான முற்றுப்புள்ளி வைப்பதற்கு காரணமாக இருந்தவர் ரணில் விக்கிரமசிங்க ஆகவே அந்தவொரு விடயமே அவருடைய தெளிவான அணுகுமுறைகளை வெளிப்படுத்துவதாக உள்ளது.

எனவே கொழும்பு மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்தவத்தினை ஐ.தே.க.ஊடாக உறுதி செய்யும் அதேநேரம், ரணில் விக்கிரமசிங்கவையும், அவரது அணியையும் வாக்குகளால் பலப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58