பாகிஸ்தான், கராச்சியிலுள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அந்நாட்டின் சமூக சேவகர் அப்துல் சத்தார் எதி, சிகிச்சை பலனின்றி தனது 88 ஆவது வயதில் காலமானார்.
பாகிஸ்தான் சமூக சேவகர் அப்துல் சத்தார் எதி, கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவால் கடும் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு மூச்சுத் திணறல் அதிகமாக இருந்து வந்தது.
இதையடுத்து அவர் கராச்சியிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பாகிஸ்தானில் “எதி” என்ற பெயரில் கடந்த ஆண்டுகளாக சமூகசேவை அறக்கட்டளை நிறுவனங்களை நடத்தி வந்தார். அவரது அறக்கட்டளை அதிக அளவிலான ஆம்புலன்ஸ் சேவையை கொண்டுள்ளது.
அதேபோல், நேர்சிங் ஹோம்கள், அனாதை இல்லங்கள், பெண்கள் பாதுகாப்பு மையம் உள்ளிட்ட அமைப்புகளை பாகிஸ்தான் முழுவதும் நடத்தி வந்துள்ளார்.
இதேவேளை, பாகிஸ்தானுக்கு வழிதவறி சென்ற இந்தியப் பெண்ணான கீதாவை, அவரது அமைப்பு தான் பாதுகாத்து வந்தது.
கீதாவை பராமரித்ததற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ரூபா ஒரு கோடி நிதியை வாங்க எதி அறக்கட்டளை அமைப்பு பணிவுடன் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM