(செ.தேன்மொழி)
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்பனை செய்ய வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையை பாதுப்பதற்கான ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டத்தை அரசாங்கத்திலிருந்து உறுதியான தீர்மானம் கிடைக்கும் வரையில் கைவிடப் போவதில்லை என்று ஒன்றிணைந்த தொழிற்சங்க தலைவர் பிரசன்ன களுத்தரதுங்க தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்குமுனையை பாதுப்பதற்கான ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டம் மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் , அது தொடர்பில் வினவிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறியவதாவது,
கொழும்பு துறைமுகத்தின் கிழக்குமுனையை விற்பனை செய்யவேண்டாம் என்றே நாங்கள் இந்த சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தி வருகின்றோம். கடந்த புதன் கிழமையே இந்த போராட்டத்தை ஆரம்பித்தோம். இதன்போது நாங்கள் எமது கோரிக்கையை முன்வைத்து துறைமுகத்திற்கு முன்பாக ஆர்பாட்டம் ஒன்றும் செய்திருந்தோம்.
இன்றைய தினம்வரை எமது ஆர்பாட்டத்தில் 23 தொழிற்சங்கங்கள் இணைந்துக் கொண்டுள்ளதுடன், துறைமுகத்தில் பணியில் ஈடுப்பட்டிருந்த தொழிற்சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் தற்போது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதுவரையிலும் அரசாங்கத்திடமிருந்து உரிய பதில் கிடைக்கப் பெறவில்லை.
ஆளும் தரப்பினருடன் கலந்துரையாடுவதற்கு நாங்கள் முயற்சிக்கின்ற போதிலும் அது முடியாமல் போயுள்ளது. இந்நிலையில் நாங்கள் துறைமுகத்தின் நுழைவாயிலை மறைத்து ஆர்பாட்டமொன்னை தற்போது முன்னெடுத்து வருகின்றோம். எங்களது வேண்டுகோள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி நியாயத்தை பெற்றுக் கொடுக்கும் வரையில் எமது இந்த போராட்டம் தொடரும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM