(இராஜதுரை ஹஷான்)
யானை சின்னத்தின் கொழும்பு கோட்டையை மொட்டு சின்னம் இம்முறை முழுமையாக கைப்பற்றும். ஐக்கிய தேசிய கட்சி,ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் கொழும்பு மாவட்டத்தில் 30 சதவீத வாக்குகளை கூட பெறாது. நாடு தழுவிய ரீதியில் பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெறும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பொதுத்தேர்தலுக்கான தேர்தல் பிரசாரங்கள் எதிர்வரும் 2ம் திகதியுடன் நிறைவுப் பெறும். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கொள்கை திட்டங்களை தேர்தல் பிரசாரமாக்கியுள்ளோம். எமது தேர்தல் பிரசாரங்கள் முழுமையாக இடம் பெற்றுள்ளது. அபிவிருத்திக்கான பொது கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடு தழுவிய ரீதியில் அமோக வெற்றிப் பெறும். ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு கோட்டையை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இம்முறை முழுமையாக கைப்பற்றும். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகிறார்கள். இருவரும் 30 சதவீத வாக்குகளை கூட பெறமாட்டார்கள்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கொள்கைத்திட்டங்களை செயற்படுத்தும் அரசாங்கம் தோற்றம் பெறுவது இன்றியமையாதது. நல்லாட்சி அரசாங்கம் போன்று பயனற்ற அரசாங்கம் தோற்றம் பெற்றால் பாரிய விளைவுகள் மீண்டும் தோற்றம் பெறும். என்பதை மக்கள் புரிந்துக் கொள்ள வேணடும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM