மேற்கு ஆபிரிக்க நாடான மாலியின் தலைநகர் பமாகோவில் இருந்து 100 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள உள்ள கனாகாபா என்ற நகரில் கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
கனாகாபா நகரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ் வண்டியொன்றே குறித்த விபத்தில் சிக்கியுள்ளது. பஸ்ஸில் 30 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர்.
நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த பஸ் திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் வீதியின் நடுவே இருந்த தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு எதிர்த்திசையில் பாய்ந்து எதிரே வந்த லொறியின் மீது குறித்த பஸ் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 19 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 12 பேர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM